பெருவளவாய்க்காலில் மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது

மண்ணச்சநல்லூர், டிச.7: மண்ணச்சநல்லூர் அருகே பெருவளவாய்க்காலில் மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை வாகன சோதனையின்போது போலீசார் கைது செய்தனர்.மண்ணச்சநல்லூர் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு வாத்தலை செந்தாமரைக்கண் பகுதியில் உள்ள பெருவளவாய்க்காலில் சிலர் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக வாத்தலை போலீசாருக்கு தகவல் கிடைந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது போலீசாரை கண்டதும் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த கும்பல் வண்டியை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். மணலுடன் நின்ற வண்டியை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்றிரவு வாத்தலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு வாலிபரை மடக்கி விசாரணை நடத்தியபோது அவர் சுனைபுகநல்லூரைச் சேர்ந்த ஜெகதீஷ் மகன் திலகன்(19), மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பலில் ஒருவர் என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவருடன் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: