அம்பேத்கர் நினைவு தினம் சிலைக்கு திமுக, கட்சியினர் மாலை அணிவிப்பு

திருச்சி, டிச. 7: அம்பேத்கரின் 62வது நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அவரது சிலைக்கு திமுக சார்பில் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன். மாநகர செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ சேகரன், பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜய் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதிமுக சார்பில் மாவட்ட துணை செயலாளர் அருள்ஜோதி தலைமையிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் அருள் தலைமையிலும், தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் கணேசன், மதிமுக சார்பில் மாநகர மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாவட்ட செயலாளர் இந்திரஜித், பாஜக சார்பில் மாவட்ட தலைவர் தங்க.ராஜய்யன், அமமுக சார்பில் அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம், மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் வக்கீல் பொன்.முருகேசன் தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் சட்ட உரிமை பாதுகாப்பு இயக்கம், தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பகுஜன்சமாஜ், இந்திய குடியரசு கட்சி, அம்பேத்கர் மக்கள் இயக்கம், ஆதிதமிழர் பேரவை, விசி பெல் எம்ப்ளாயீஸ் யூனியன் அசோசியேஷன் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Related Stories: