×

பெண் போலீசை ஆபாசமாக படம் பிடித்த விவகாரம் திருச்சி மகளிர் போலீசுக்கு வழக்கு விசாரணை மாற்றம்

திருச்சி, டிச. 7: திருச்சி சுப்ரமணியபுரம் போலீஸ் குடியிருப்பில் குடியிருந்தவர் உதயகுமார் (35). திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். அதே ஆயுதப்படையில் பெண் போலீசாக இருந்தவர் உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 2013ம் ஆண்டு முதல் இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம், காதலாக மாறியது. கடந்த 4 ஆண்டாக காதலித்து வந்த நிலையில், உமா வீட்டினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உறவினர் மகனுக்கு கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர்.
இந்நிலையில் கடந்தாண்டு முன்னாள் காதலியிடம் பேசிய ஏட்டு உதயகுமார், அவரை அழைத்துக் கொண்டு திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். அப்போது பெண் போலீஸ் உமாவை அரைகுறை ஆடையுடன் செல்போனில் படம் பிடித்த உதயகுமார், உமாவின் கணவரின் பேஸ்புக்கிற்கு படங்களை அனுப்பி உள்ளார். இதுகுறித்து அறிந்த உமா, உதயகுமாரிடம் சென்று கேட்ட போது அவரை மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிந்த முசிறி போலீசார் உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் உமாவை திருச்சியில் உள்ள ஓட்டலுக்கு அழைத்து வந்து படம் பிடித்ததால் இந்த வழக்கு விசாரணை திருச்சி கன்டோன்மென்ட் மகளிர் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Police Sexual Assault ,Trichy Women's Police ,
× RELATED நவல்பட்டு வாக்குசாவடியில் வாக்கு...