சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா

திருச்சி, டிச.7: சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் திருச்சி மாவட்ட வேளாண்மைத்துறையும் இணைந்து அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா நடத்தப்பட்டது. மண்ணியல் தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் தனுஷ்கோடி வரவேற்றார். மாநில திட்ட வேளாண் துணை இயக்குனர் ராஜேஸ்வரன் தலைமை வகித்து, உலக மண்வள தின விழாவின் முக்கியத்துவம், விவசாயிகளுக்கு ஏற்படும் விழிப்புணர்வு பற்றி பேசினார். வேளாண் அறிவியல் நிலைய‘ திட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) விநாயகமூர்த்தி, மணிகண்டம் வேளாண் உதவி இயக்குநர் கோமதி ஆகியோர் மண் பரிசோதனையின் முக்கியத்துவம் பற்றியும், மண்வளத்தை பாதுகாக்கும் முறைகளைப் பற்றியும் விளக்கினர். விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டது. தொழில்நுட்ப வல்லுநர் (வேளாண் விரிவாக்கம்) நூர்ஜஹான் ஹனீப் நன்றி கூறினார்.

Related Stories: