திருச்சி, டிச. 7: திருச்சி புத்தூர் ஆண்டவர் காலனியை சேர்ந்தவர் தீனா(9). அப்பகுதியில் உள்ள பாத்திமா பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்றுமுன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வெறி நாய் கடித்தது. அருகில் இருந்தவர்கள் நாயிடமிருந்து சிறுவனை மீட்டனர். நாய் கடித்ததில் காலில் காயம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதேபோல் புத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் முத்தையா(60). இவர் 2 நாட்களுக்கு முன் உழவர் சந்தைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். இவரையும் தெரு நாய் கடித்தது. காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பினார்.