திருக்காட்டுப்பள்ளி பேருந்து நிலையம் அருகில் சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

திருக்காட்டுப்பள்ளி, டிச. 7: திருக்காட்டுப்பள்ளி பேருந்து நிலையம் அருகில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருக்காட்டுப்பள்ளி “தீயாடியப்பர் பேருந்து நிலையத்துக்கு” தஞ்சாவூர், திருவையாறு, கல்லணை, லால்குடி, செங்கிப்பட்டி, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களிலிருந்து தினசரி நூற்றுக்கணக்காக பேருந்துகள் வந்து செல்கின்றன.பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்து விநாயகர் கோயில் அருகில் மெயின் ரோட்டில் பஸ்கள் செல்ல வேண்டும். அவ்வாறு மெயின் ரோட்டில் சேரும் இடத்தில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து வாகனங்களும் பள்ளத்தில் இறங்கி தடுமாறி செல்கின்றன.இரவு நேரங்களில் வரும் இருச்சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: