பட்டுக்கோட்டை, டிச. 7: பட்டுக்கோட்டை கோர்ட் வளாகத்தில் மயங்கி விழுந்த முதியவர் இறந்தார்.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஆனைவிழுந்தான் குளத்தெருவை சேர்ந்தவர் சுப்பையன் (60). இவரது மகன் சிவக்குமார். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கடந்த ஓராண்டாக தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் விவாகரத்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை, பட்டுக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது வெளிநாட்டில் சிவக்குமார் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் வாய்தா பட்டுக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் வந்துள்ளது. முதல் வாய்தாவில் ஆஜராவதற்கு சிவகாமி தனது குழந்தையுடன் வந்தார்.