வடமாநில பெண்ணுக்கு பாலியல் தொல்லை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்ககோரி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், டிச. 7: வடமாநில இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்ககோரி கும்பகோணம் காந்தி பூங்கா அருகில்  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்களில் கருப்பு துணிகளை கட்டி நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். மாதர் சங்க நிர்வாகி புவனா, சிபிஎம் நிர்வாகிகள் சின்னைபாண்டியன், பார்த்தசாரதி, அனைத்திந்திய மாதர் சங்கத்தினர், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பங்கேற்றனர்.

Related Stories: