×

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள கிறிஸ்தவர்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்க அழைப்பு

தஞ்சை, டிச. 7:  தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள், ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பங்கள் அளிக்கலாம். புனித பயணம் மேற்கொள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இப்புனித பயணம் 2019 ஜனவரி வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயண காலம் 10 நாட்கள் வரை இருக்கும்.

இதற்கான விண்ணப்ப படிவங்கள், கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலங இருந்து கட்டணமின்றி பெறலாம். இதற்கான நிபந்தனை, விதிமுறை மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவை இணையதளத்தில் காணலாம். விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் “ஜெருசலேம் புனித பயணத்துக்கான விண்ணப்பம்” என குறிப்பிட்டு மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், கலச மகால் பாரம்பரிய கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை 600005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக முதல் தளம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Tags : Christians ,journey ,pilgrimage ,Jerusalem ,
× RELATED மயிலாடுதுறையில் குருத்தோலை ஞாயிறு பவனி