×

வெவ்வேறு விபத்து ஒரத்தநாட்டில் 2 பேர் பலி

ஒரத்தநாடு, டிச. 7: ஒரத்தநாடு அருகே வெவ்வேறு விபத்தில் 2 பேர் பலியாகினர்.ஒரத்தநாடு  அருகே சில்லத்தூரை சேர்ந்தவர் குழந்தைராமன் (70). கடந்த 21ம் தேதி இவர்  மீது மரம் விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில்  சிகிச்சை  பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.மற்றொரு  விபத்து: ஒரத்தநாடு அருகே கருவாக்குறிச்சியை சேர்ந்தவர் சுரேஷ் (36). இவர்  நேற்று முன்தினம் மன்னார்குடி சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது  பைக்கில் இருந்து தவறி விழுந்த அவர் படுகாயமடைந்தார். ஒரத்தநாடு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.  இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.



Tags : accident ,
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...