×

மதுபாட்டில் விற்பனை செய்த 3 பேர் மீது வழக்குப்பதிவு

திருவையாறு, டிச. 7: திருவையாறு அடுத்த கருப்பூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ராஜா (27). இவர் வீட்டின் பின்புறம் மதுபாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்தார். அதேபோல் கோனேரிராஜபுரம் மெயின்ரோட்டை சேர்ந்த மாரியம்மாள் (29) என்பவர் குடமுருட்டி ஆற்றங்கரையோரம் மதுபாட்டில் விற்று கொண்டிருந்தார். லால்குடி தாலுகா செங்கரையூரை சேர்ந்த தேவர் (57) என்பவர் கோனோரிராஜபுரம் குடமுருட்டி ஆற்றங்கரையோரம் மதுபாட்டில் விற்று கொண்டிருந்தார். இந்த தகவல் நடுக்காவேரி சப்இன்ஸ்பெக்டர் கனகதாசனுக்கு தெரியவந்தது. இதையடுத்து சப்இன்ஸ்பெக்டர் கனகதாசன் விரைந்து சென்று ராஜா, மாரியம்மாள், தேவர் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags :
× RELATED திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் திருக்கல்யாணம்