×

உலக மண்வள விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஒரத்தநாடு, டிச. 7: ஒரத்தநாடு தாலுகா ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மண் மாசுபடுவதை தடுக்க உலக மண்வள விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கல்லூரி முதல்வர் பாண்டியன் தலைமை வகித்தார். சிறப்பு பேராசிரியர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தனர். நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர்  சுப்பிரமணியன் பங்கேற்று மண்ணின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
பூச்சியியல்துறை பேராசிரியர் நடராஜன் மற்றும் மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா