×

போக்சோ சட்டத்தில் 17 வயது பெண்ணை கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது

திருவையாறு, டிச. 7: திருவையாறு அருகே போக்சோ சட்டத்தில் 17 வயது பெண்ணை கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த பவனமங்கலத்தில் விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. இந்த செங்கல் சூளையில் திருவையாறை சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கவுதமனும் (38) குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் திருவையாறை சேர்ந்தவரின் 17 வயது மகளை ஆசைவார்த்தை கூறி கவுதமன் பாலியல் ெதாந்தரவு செய்துள்ளார். இதனால் 17 வயது பெண் கர்ப்பமானார்.இதுகுறித்து திருவையாறு அனைத்து மகளிர் போலீசில் பெண்ணின் தாய் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தில் கவுதமனை கைது செய்தார்.

Tags :
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா