×

உலக மண்வள தினவிழா

தா.பழூர், டிச.7: தா.பழூர் வட்டாரம் காரைக்குறிச்சி கிராமத்தில் உலக மண்வள தினவிழா வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) செல்வகுமார் தலைமையில் நடை பெற்றது. மண்வளம் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என தொழில்நுட்ப ரீதியாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. மேலும் ரசாயன உரங்களை பயன்படுத்தும் போது மண்பரிசோதனை அடிப்படையில் கடைப்பிடிக்க வேண்டும். பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிடுவதன் மூலம் மண்வளம் குறையாமல் பாதுகாக்கப்படுகிறது.இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி அலுவலர்கள் ஆனந்த் குமாரபாண்டியன் மற்றும் அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Tags : World Earth Day ,festival ,
× RELATED கடமலைக்குண்டுவில் உலக பூமி தின விழிப்புணர்வு நிகழ்ச்சி