×

எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

திருப்பூர், டிச.7: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, திருப்பூர் ரயில்நிலையம் அருகில் எஸ்டிபிஐ சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் அபுதாஹீர் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பஷீர் அகமது, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஹபிபுர் ரஹ்மான், திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் முகில் ராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு, கண்டன முழுக்கம் எழுப்பினர். இதேபோல், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பாசிச எதிர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags : SDPI ,demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்