×

மின் கம்பத்தில் வளர்ந்துள்ள செடிகளால் விபத்து அபாயம்

திருப்பூர், டிச. 7: திருப்பூர் மாநகராட்சி நல்லுார் கணபதிபாளையம் கிராமத்தில் உள்ள மின் கம்பத்தில் வளர்ந்துள்ள செடிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. திருப்பூர் மாநகராட்சி மூன்றாம் மண்டலத்திற்குட்பட்ட கணபதிபாளையம் கிராமத்தில் கழிவுநீர் ஓடையின் அருகில் மின் கம்பம் உள்ளது. இந்த மின் கம்பத்தை சுற்றிலும் பல்வேறு செடிகள் வளர்ந்துள்ளது.

இதில், கொடி வகையைச் சார்ந்த செடிகள் நீண்டு வளர்ந்து மின் கம்பத்தை சுற்றி மேலே படந்துள்ளது. மழை பெய்தாலோ, பனி சூழ்ந்தாலோ செடி வழியாக மின்சாரம் பாய்ந்து நடந்து செல்பவர்களை தாக்கும் அபாயம் உள்ளது. கணபதிபாளையம் முக்கிய சாலையாக இருப்பதால் ஆயிரக்கணக்கானோர்   இந்த வழியாக செல்கின்றனர். மின்வாரிய பணியாளர்கள் கம்பத்தில் வளர்ந்துள்ள செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : plants ,
× RELATED பீட்ரூட் கீரை மசியல்