×

தபால் அனுப்பும் நூதன போராட்டம்

ஊட்டி, டிச. 7:அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என வலியுறுத்தி சிவசேனா கட்சியினர்  பிரதமருக்கு விரைவு தபால் அனுப்பினர். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என வலியுறுத்தி நீலகிரி மாவட்ட சிவசேனா கட்சி சார்பில் பாரத பிரதமருக்கு விரைவு தபால் அனுப்பும் நூதன போராட்டம் ஊட்டியில் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட  தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரபு, பொருளாளர் ரீதீஷ், நகர தலைவர் ரங்விரைவு கராஜ், மாவட்ட துணைத் தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊட்டி மார்க்கெட் தபால் நிலையத்தில் நடந்த இந்த நூதன போராட்டத்தின் போது, கோரிக்கை அடங்கிய மனுவை விரைவு தபாலாக பாரத பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பினர். இதில், மணி, சந்தோஷ், வினோத்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்