ஓட்டப்பிடாரம், டிச.6:
புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலயத்தை சுற்றியுள்ள இடங்களில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். புளியம்பட்டியில் புனித அந்தோணியார் ஆலய வளாகத்தை சுற்றிலும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தனிநபர்கள் பலர் ஆக்கிரமிப்புகள் செய்திருப்பதாகவும் அதனை அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் கூறி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குறிப்பிட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.