×

வாலிபர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து காவல்நிலையத்தை முற்றுகை முயற்சி

மண்ணச்சநல்லூர், டிச.6: மண்ணச்சநல்லூரில் மாணவரை தாக்கிய போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தை நேற்று மக்கள் மறுமலர்ச்சி கழகம் அமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அவர்களை இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள்ள இன்ஸ்பெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது: மண்ணச்சநல்லூர் சஞ்சய்காந்தி நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் முகேஷ் (21), அவருடைய நண்பர் சேக்அப்துல்லா என்பவரும் கடந்த 2ம் தேதி இரவு முகேசின் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் மண்ணச்சநல்லூர் போலீசார் முகேசின் வீட்டிற்கு சென்று இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு போலீஸ்காரர் சுமன் வாலிபர்கள் இருவரையும் அடித்து உதைத்ததில் இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் இதுகுறித்து விசாரணை நடத்துவதாக தெரிவித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Siege ,attack ,
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...