×

திருச்சி ஏர்போர்ட்டில் வள்ளுவர் சிலை திறப்பு

திருச்சி, டிச.6: திருச்சி ஏர்போர்ட்டில் நிறுவப்பட்டுள்ள வள்ளுவர் சிலையை கலெக்டர் ராஜாமணி நேற்று திறந்து வைத்தார். திருச்சி விமான நிலையத்தின் புதிய முனைய பகுதியில் ரூ.5 லட்சம் செலவில் தமிழக பாரம்பரியத்தை விளக்கும் வகையில் சிலைகள் மற்றும் வள்ளுவர் சிலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் ரூ.1லட்சம் செலவில் வள்ளுவர் சிலை அமைக்கும் பணி நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் 3 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள வள்ளுவர் சிலையை திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திருச்சி விமானநிலைய இயக்குநர் குணசேகரன், முனைய மேலாளர் ஷென் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Opening ,Trichy Airport ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்..!!