×

நிவாரண பட்டியல் நாளை அளிக்கப்படவில்லையெனில் 8ம் தேதி கூட்டு கூட்டத்தில் தொடர் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு

திருத்துறைப்பூண்டி, டிச.6: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏவுமான பழனிச்சாமியும், இந்தியகம்யூனிஸ்ட் கட்சி திருவாரூர் மாவட்ட செயலாளரும் ,முன்னாள் முன்னாள் எம்எல்ஏவுமான சிவபுண்ணியம் நிருபர்களிடம் கூறியதாவது: கஜா புயலால் தாக்கப்பட்டு 20 நாட்களாகியும் நிவாரணபணிகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஒரு சிலருக்கு நிவாரண பொருட்கள் கொடுக்கப்பட்டு அது பத்திரிக்கையில் மட்டும் வந்துள்ளது. முதல்வர், உணவு துறை அமைச்சர், கலெக்டர்  ஆகியோர் அனைவருக்கும் நிவாரணம் உண்டு என்று சொன்னார்கள்.ஆனால் இப்போது ஏற்கனவே எடுத்த பட்டியலைநிராகரித்துவிட்டு புது பட்டியலைஎடுக்க சொல்லியுள்ளார்கள். வரும் 7ம் தேதிக்குள் அனைவருக்கும் நிவாரணம் வழங்குவதற்கானநடவடிக்கையை எடுத்து பட்டியலை முறைப்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் நாளை  திருவாரூரில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சிமாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்ட செயலாளர்கள், துணை செயலாளர்கள் கொண்டு கூட்டு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் 8ம்தேதி முதல் நான்கு மாவட்டங்களிலும் நேற்றுநடைபெற்ற சாலை மறியலைவிட 10 மடங்கு அளவில் தொடர் போராட்டங்கள் அறிவிக்கப்பட வுள்ளது என்றனர்.

Tags : Communist Party of India ,CPI-M ,
× RELATED வாக்குச்சாவடியில் தாமரை வடிவ அலங்காரம்