×

அனைவருக்கும் நிவாரணம் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு கொடுக்கும் போராட்டம்

நீடாமங்கலம்,டிச.6: கஜா புயலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம்  சார்பில் நீடாமங்கலம் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் பூசாந்திரம்,விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ஜெயராமன் தலைமையில் நடந்தது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.போராட்டத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.பாதிக்கப்பட்ட அனைத்து நெற்பயிர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. அதேபோன்று மன்னார்குடி கிழக்கு ஒன்றிய சார்பில் கூத்தாநல்லூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த மனு கொடுக்கும் போராட்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைதலைவர் மணி தலைமை வகித்தார்.

Tags : CPI (M) ,
× RELATED நீட் ஆள்மாறட்ட வழக்கில் சிபிஐயை...