×

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் பயணிகள் ஓய்வறை கட்டிட மேற்கூரை சேதம் பயணிகள் அச்சம்

கும்பகோணம்,  டிச. 6: கும்பகோணம்  பேருந்து நிலையத்தில்  பயணிகள் வசதிக்காக ஏசி அமரும்  ஓய்வறை கடந்த மகாமகத்தின்போது  அமைக்கப்பட்டது. தற்போது போதிய பராமரிப்பு இல்லாமல் ஓய்வை மூடப்பட்டுள்ளது.  இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பலத்த  காற்றுடன் மழை பெய்தபோது  ஓய்வறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக  பெய்த மழையில் ஓய்வறையின் தகர ஷீட்டுக்கள்  முழுவதும் பெயர்ந்து ஆபத்தான  நிலையில் தொங்கி கொண்டிருக்கிறது.

இதனால் பேருந்து நிலையத்துக்கு  பயணிகள், டிரைவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி  நிர்வாகத்திடம் அப்பகுதியில் உள்ள  வணிகர்கள் புகார் செய்தனர். ஆனால்  நகராட்சி நிர்வாகத்தினர், தொங்கி கொண்டிருக்கும்  தகர ஷீட்டை அகற்றாமல்  அலட்சியப்படுத்தும் விதமாக இருந்து வருகின்றனர். எனவே கும்பகோணம் பேருந்து   நிலைய வளாகத்தில் பயணிகள் ஓய்வறையில் தொங்கி கொண்டிருக்கும் தகர  ஷீட்டுக்களை அகற்ற வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Passengers ,bus stand ,Kumbakonam ,
× RELATED குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி