×

சுகாதார நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

நெய்வேலி, டிச. 6: நெய்வேலி என்.எல்.சி ஆர்ச் கேட் நகர பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாமல் இருப்பதால் குழந்தைகள், கர்ப்பிணிகள், தாய்மார்கள், பொதுமக்கள் தடுப்பூசி, சொட்டு மருந்து, காய்ச்சல், விஷகடி நோய்களுக்கு உடனடி சிகிச்சை பெற முடியாமல் மிகுந்த சிரமங்களை நாள்தோறும் சந்தித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என்றால் ஆர்ச் கேட்டில் இருந்து பத்துகிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெங்கடாம்பேட்டை கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தான் செல்ல வேண்டும். அங்கு செல்ல சாலை வசதி, போக்குவரத்து போன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் அங்கு செல்வதில்லை என கூறப்படுகிறது. இப்பகுதி மக்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க  பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.  எனவே நெய்வேலி
என்.எல்.சி ஆர்ச் கேட் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின்  நலன் கருதி உடனடியாக சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று  பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது