×

மலையை உடைத்து அரசு குடியிருப்பு கட்ட இளைஞர்கள் எதிர்ப்பு.....திருவண்ணாமலையில் பரபரப்பு

திருவண்ணாமலை, டிச.6: திருவண்ணாமலை அருகே மலையை உடைத்து அரசு குடியிருப்பு கட்ட எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை- மணலூர்பேட்டை சாலையில் உள்ள தேனிமலை பகுதியில் மலைக்குன்று உள்ளது. இந்த மலைக்குன்றை உடைத்து தரை மட்டமாக்கி, அங்கு குடிசைமாற்று வாரியம் சார்பில் அரசு குடியிருப்பு கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில நாட்களுக்கு முன்பு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், அப்பகுதியில் மீண்டும் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தகவலறிந்த இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு, அரசு குடியிருப்பு கட்டக்கூடாது என தெரிவித்து நேற்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மலையை தகர்க்ககூடாது என கோஷங்கள் எழுப்பினர். இதனால் நேற்று பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதையடுத்து, இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.மலைக்குன்ைற அழித்து அரசு குடியிருப்பு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்களின் இந்த திடீர் போராட்டத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : rebellion ,hill ,Thiruvannamalai ,
× RELATED வெள்ளிங்கிரி மலையில் குவியும் குப்பைகள்