×

இருசக்கர வாகனம் மோதி பெண் காயம்

அரியலூர்,நவ,29: அரியலூர் மாவட்டம் மேலவரப்பங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மனைவி சங்கம்பாள்(60) இவர் தன் வயல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது அவர் ரோட்டை கடக்க முயற்சித்த போது அவ்வழியே  இருசக்கர வாகனத்தில் வந்த தேளூர் கிராமத்தைச் சேர்ந்த ராமஜெயம் மகன் காசிநாதன்(24) என்பவர் நிலைதடுமாறி சங்கம்பாள் மீது மோதினார். இதில் படுகாயமடைந்த சங்கம்பாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.    இதனையடுத்து இச்சம்பவம் குறித்து தூத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED பெரம்பலூர் /அரியலூர் கொள்ளை நோய் பரவலை...