×

டெல்லியை முற்றுகையிட அரியலூர் விவசாயிகள் டெல்லி பயணம்

அரியலூர். நவ. 29: விவசாயிகளை கடனிலிருந்து  முழு விடுதலை செய்ய வேண்டும்,  எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலை வேளாண் விளைபொருட்களுக்கு கிடைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி வரும் நாளை (29ம்தேதி), 30ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டம் மற்றும் அதனையொட்டி டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் பங்கேற்க அரியலூரிலிருந்து விவசாய பிரதிநிதிகள் டெல்லி சென்றனர். இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க அரியலூர் மாவட்ட தலைவர் ஆண்டவர், அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் ரயில் மூலம் டெல்லி புறப்பட்டனர். இவர்களுடன் விவசாயிகள் பிரதிநிதிகள் அண்ணாத்துரை, கண்ணன்  ஆகியோரும்  சென்றனர்.

Tags : Ariyalur ,Delhi ,
× RELATED விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு 10 ஆண்டு சிறை