×

வரப்பு தகராறில் விவசாயி கைது

அரியலூர்,நவ,29: அரியலூர் மாவட்டம், குருவாடி-தேளூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (57) விவசாயி. இவர் நேற்று முன் தினம் தனது வயலுக்கு சென்றார். அப்போது அவரது நிலத்தில் வரப்பு கட்டி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன். தனது பக்கத்து வயலை சேர்ந்த அதே பகுதியை சேர்ந்த சாமிநாதன் (50) என்பவரிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சாமிநாதன், ராஜேந்திரனை பலமாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து ராஜேந்திரன் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் தூத்தூர் போலீசார் சாமிநாதன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : dispute ,Batticaloa ,
× RELATED கொடுங்கையூர் டாஸ்மாக் கடையில் தகராறு...