பொன்னமராவதி, நவ.28: பொன்னமராவதி அருகே மறவாமதுரையில் காரையூர் அரசு ஆரம்பசுகாதார நிலையம் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடந்தது. மறவாமதுரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நகரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, காரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கடைவீதி, சடையம்பட்டி பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் சித்த மருத்துவர் மாமுண்டி தலைமையில் மாணவர்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.