×

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

அரியலூர்,நவ.28:  அரியலூர்  விக்கிரமங்கலம் அருகே பட்டகட்டாங்குறிச்சி தெற்கு தெருவை  சேர்ந்தவர் ராவணன் (50). விவசாயியான இவர் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்னை  இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில்  யாரும் இல்லாத போது ராவணன் பருத்தி செடிக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை  எடுத்து குடித்து மாயக்க நிலையில் கிடந்தார். இதனை கண்ட உறவினர்கள் ராவணனை  மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  சிகிச்சை பெற்று வந்த ராவணன் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் கண்ணன் வழக்கு  பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை