அரியலூர்,நவ.27: அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே வயலில் இருந்து வீட்டுக்கு வந்த பெண்ணிடம் 4 பவுன் செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர். அரியலூர் மாவட்டம் கடுகூர் பொய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராணி(55). இவர் நேற்று முன்தினம் மாலை தனது வயலுக்கு சென்று விட்டு மாலை புல்லுக்கட்டுடன் வீட்டுக்கு திரும்பியுள்ளார். ஊரின் அருகே நடந்து வந்தபோது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் செல்வராணி அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து கயர்லாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.