விழுப்புரத்தில் வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம், நவ. 21:  விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 23ம் தேதி தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து ஆட்சியர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வெள்ளிக்கிழமைகள் தோறும், வேலைவாய்ப்பு வெள்ளி என்ற தலைப்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில், இந்த வாரத்திற்கான முகாம் வரும் 23ம் தேதி விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் பங்கேற்க விரும்பும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், தங்களின் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சுயகுறிப்புகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: