இரு தரப்பினர் மோதல் 6 பேர் மீது வழக்கு

திருவெண்ணெய்நல்லூர், நவ. 21:  திருவெண்ணெய்நல்லூர் அடுத்த தென்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மகன்கள் சிவசக்தி, சிவபாலன் ஆகிய இருவரும் சேர்ந்து கொண்டு கூரானூர் பேருந்து நிறுத்தத்தில் சாலையின் குறுக்கே படுத்து வழி மறித்துள்ளனர். இதையடுத்து அந்த வழியாக சென்ற திருமுண்டீச்சரம் கிராமத்தை சேர்ந்த குப்பன் மகன் பாலமுருகன்(39) என்பவர், ஏன் என தட்டி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிவசக்தி, சிவபாலன், இவர்களின் சகோதரர் சேதுபதி ஆகிய 3 பேரும் சேர்ந்து பாலமுருகனை ஆபாசமாக திட்டி கையில் வைத்திருந்த கிரிக்கெட் மட்டையால் அடித்து மிரட்டல் விடுத்துள்ளார். இதை தொடர்ந்து பாலமுருகன் மற்றும் அவரது சகோதரர் ரமேஷ், சரவணன் ஆகிய 3 பேரும் சேர்ந்து சிவசக்தி தரப்பினரை திட்டி அடித்து, மிரட்டல் விடுத்துள்ளனர்.இது குறித்து இருதரப்பினரும் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து இருதரப்பை சேர்ந்த பாலமுருகன், சேதுபதி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மற்ற 4 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: