சாராயம் விற்ற 3 பேர் அதிரடி கைது

திருக்கோவிலூர், நவ. 21: கண்டாச்சிபுரம் அருகே சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கண்டாச்சிபுரம் அருகே உள்ள பழவலம், கடையம் கிராமத்தில் அனுமதியின்றி கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கண்டாச்சிபுரம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பழவலம் கிராமத்தை சேர்ந்த தனஞ்செழியன்(20), அயோத்தி(35), கடையம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை(40) ஆகிய மூவரும் சாராயம் விற்றுக்கொண்டிருந்ததை போலீசார் பிடித்து கைது செய்து அவர்களிடமிருந்து 115 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்ததுடன், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: