கள்ளக்குறிச்சி, நவ. 21: கள்ளக்குறிச்சி தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் சேலம் மெயின் ரோடு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் 200க்கும் மேற்பட்ட காய்கறி கடை, பழக்கடை, மளிகை கடை உள்ளிட்ட கடைகள் உள்ளது. சுமார் 40 ஆண்டுகளாக இந்த மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. குறைந்த பட்சம் ரூ. 2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை நகராட்சியில் டெபாசிட் கட்டி ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை மாதந்தோறும் வாடகை செலுத்தி இந்த கடைகளை வியாபாரிகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதமாக காய்கறி மார்க்கெட் அருகில் சாலையோரத்தில் 50க்கும் மேற்பட்ட மினி டெம்போ வாகனத்தை வைத்து வியாபாரம் செய்கின்றனர். அவர்களுக்கு கடை வாடகை உள்ளிட்ட செலவுகள் இல்லாததால் விலையை குறைத்து விற்கின்றனர். இதனால் ெபாதுமக்கள் அவர்களிடம் காய்கறிகளை வாங்கி சென்றனர். இதனால் மார்க்கெட் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.