அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் 18 பேர் மீது வழக்கு பதிவு

உளுந்தூர்பேட்டை, நவ. 21: உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆணவப் படுகொலைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போலீசார் அனுமதியின்றி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் அறிவுக்கரசு உள்ளிட்ட 18 பேர் மீது  உளுந்தூர்பேட்டை காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: