திருக்கோவிலூர், நவ. 21: திருக்கோவிலூர் அடுத்த கண்டாச்சிபுரம் பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் திருட்டு நடைபெறுவதாக கண்டாச்சிபுரம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுகருவாட்சி கிராமத்தை சேர்ந்த செல்வம்(40), கடையம் கிராமத்தை சேர்ந்த பூங்காவனம்(33) ஆகிய இருவரும் அனுமதியின்றி மாட்டுவண்டிகளில் மணல் எடுத்துச்சென்றதை போலீசார் பிடித்து கைது செய்து, அவர்களிடமிருந்து இரண்டு மாட்டுவண்டிகளை மணலுடன் பறிமுதல் செய்தனர்.