×

மின்சாரமின்றி மக்கள் கடும் அவதி

முத்துப்பேட்டை நவ.21: திருவாரூர்மாவட்டம், முத்துப்பேட்டையில் கஜா புயல் தாக்கத்தால்முற்றிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்ப்பட்டது. இதில் மக்கள் வீடுகள் பொருட்கள், உடமைகள் கால்நடைகளை இழந்து பரிதவித்து வருகின்றனர்.இதில் மின் கம்பங்கள், செல் டவர்கள் அனைத்தும் சாய்ந்து மின்சாரம், தொலைத்தொடர்பு இல்லாததால் வெளியில் முத்துப்பேட்டை பாதித்துள்ளது தெரியாமலேயே போனது. இதில் தொலைத்தொடர்புக்கு பிஎஸ்என்எல் மற்றும் தனியார்தொலைத்தொடர்பு துறையினர்தற்காலிகமாக ஆங்காங்கே டவர்அமைத்து மக்கள் தொலை தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தி வருகின்றனர்.ஆனால் முத்துப்பேட்டை பகுதியில் இன்னும் மின் சாரம்  வரவில்லை. மேலும் இரவில் முத்துப்பேட்டை முழுவதும் இருண்டு காணப்படுவதால் மக்கள் வெளியில் செல்ல அச்சமடைகின்றனர். எனவே மின் விநியோகத்தில் அரசு பணிகளை துரிதப்படுத்தி முத்துப்பேட்டைக்கு ஓரிரு நாட்களில் மின் விநியோகம் செய்யவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு