சித்தோடு அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

பவானி, நவ. 21:  சித்தோடு அருகே கார்களை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி  ரோட்டோரத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. சேலத்தில் இருந்து கோவை நோக்கி ஒரு கண்ெடய்னர் லாரி கார்களை ஏற்றிக் கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தது. சித்தோடு அடுத்த செல்லப்பம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி,  ரோட்டோரத்தில் இருந்த மற்றொரு லாரி மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

 இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து லாரி மீட்பு வாகனம் கொண்டு மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது. அப்போது அதிக அளவில் டீசல் வெளியேறியது. இதனால் தீ விபத்து அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, பவானி தீயணைப்பு நிலையத்திலிருந்து வாகனம் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு படையினர் உதவியுடன் கண்டெய்னர் லாரி பாதுகாப்பாக மீட்கப்பட்டது. சம்பவ இடத்தில் சித்தோடு எஸ்.ஐ., சத்தியசீலன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: