ஈரோடு, நவ. 21: ஈரோடு மாவட்டம் சென்னிமலை பள்ளிவாசல் வீதியில் அஹ்லேதக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் உள்ளது. இந்த மஜ்ஜித்தின் தலைவலர் ஜீலான் தலைமையில் கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா அட்டவணை பிடாரியூர் கிராமத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் மேற்பார்வையில் எங்கள மஸ்ஜித்திற்கு சொந்தமாக 14 சென்ட் அளவுள்ள இடம் உள்ளது. அந்த இடம் எங்கள் மஸ்ஜித்தின் பாத்தியப்பட்ட மயான இடமாகும்.