மயான இடத்தில் கழிப்பறை கட்ட தடை விதிக்க கோரிக்கை

ஈரோடு, நவ. 21:  ஈரோடு மாவட்டம் சென்னிமலை பள்ளிவாசல் வீதியில் அஹ்லேதக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் உள்ளது. இந்த மஜ்ஜித்தின் தலைவலர் ஜீலான் தலைமையில் கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா அட்டவணை பிடாரியூர் கிராமத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் மேற்பார்வையில் எங்கள மஸ்ஜித்திற்கு சொந்தமாக 14 சென்ட் அளவுள்ள இடம் உள்ளது. அந்த இடம் எங்கள் மஸ்ஜித்தின் பாத்தியப்பட்ட மயான இடமாகும்.

  எங்களுக்கு சொந்தமான மயான இடத்தில் கலெக்டர் உத்தரவு இல்லாமல் எவ்விதமான கட்டுமானங்களும், கட்டிடங்களும் கட்டக்கூடாது என கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மயான இடத்தில் சென்னிமலை பேரூராட்சி நிர்வாகம் கழிப்பிடங்கள் கட்டுவதற்காக முடிவு செய்துள்ளனர். எங்களுக்கு சொந்தமான மயான இடத்தில் கழிப்பிடங்கள் கட்டம் மற்றும் எந்த கட்டிடங்களையும் கட்டக் கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளன

Related Stories: