×

செங்குந்தர் பார்மசி கல்லூரியில் மருந்தியல் வாரவிழா

திருச்செங்கோடு, நவ.21: திருச்செங்கோடு செங்குந்தர் பார்மசி கல்லூரியில், ‘‘ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும் பார்மசிஸ்டுகள்’’ என்ற தலைப்பில் மருந்தியல் வாரவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜான்சன்ஸ் நடராஜன் தலைமை வகித்தார். செங்குந்தர் பொறியியல் கல்லூரி தாளாளரும், செயலாளருமான பாலதண்டபாணி வாழ்த்தி பேசினார்.

கல்லூரி பொருளாளர் தனசேகரன், முதல்வர் சுரேந்திரகுமார், தலைமை நிர்வாக அதிகாரி மதன், வேலைவாய்ப்பு மற்றும் நிறுவன தொடர்பு அதிகாரி அரவிந்த் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் சந்தோஷ்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கோவை நிவாரன் லைப் சயன்ஸ் நிறுவனர் சந்தோஷ் பிள்ளை பங்கேற்று “ஏன் தள்ளிப்போடுகிறோம்” என்ற தலைப்பில் பேசினார். பெங்களூரு அபோடெக்ஸ் ஆராய்ச்சி நிறுவன துணை பொதுமேலாளர் ராஜேஷ், மாணவர்களுக்கு மருந்தியல் துறை வாய்ப்புகளை பற்றி எடுத்துக்கூறினார். விழாவை முன்னிட்டு செங்குந்தர் மருந்தியல் கல்லூரின் சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்குதல், ரத்ததான முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  

Tags : Senthankar Pharmacy College ,
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா