×

கஜா புயலால் பாதித்த திருவாரூர் மாவட்டத்தில் பணியாற்ற 100 துப்புரவு ஊழியர்கள் பயணம்

நாமக்கல், நவ.21: கஜா  புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பணியாற்றிட,  நாமக்கல்  மாவட்டத்தில் இருந்து 100 துப்புரவு ஊழியர்கள் நேற்று தனி வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர். நாமக்கல்  நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் பணி மேற்பார்வையாளர் ஜெயராமன்  ஆகியோர் தலைமையில், 15 துப்புரவு பணியாளர்கள், நேற்று நகராட்சி வாகனத்தில், திருவாரூர் மாவட்டத்தில் துப்புரவு பணிகள் மேற்கொள்ள புறப்பட்டுச்சென்றனர். அதேபோல் திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம், பள்ளிபாளையம் நகராட்சியில்  இருந்து 85 துப்புரவு பணியாளர்கள் தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் சுகாதாரம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள புறப்பட்டு சென்றுள்ளனர். இவர்கள் வரும் 24ம் தேதி வரை அம்மாவட்டங்களில் தங்கி துப்புரவு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

Tags : cleaning staff ,storm ,Ghazi ,Tiruvarur district ,
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...