×

திருவண்ணாமலை தீபத்திருவிழா சிறப்பு கட்டண தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் கிடைக்கும்

திருவண்ணாமலை, நவ.21: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, பரணி தீபம் மற்றும் மகா தீபம் சிறப்பு கட்டண தரிசன டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு இன்று நடக்கிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் நிறைவாக, நாளை மறுதினம் (23ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகாதீபமும் ஏற்றப்படும். அதையொட்டி, பரணி தீபம், மகா தீபம் தரிசனம் காண அண்ணாமலையார் கோயிலுக்குள் செல்லும் பக்தர்களுக்கு, சிறப்பு கட்டண தரிசன டிக்கெட் ஆன்லைனில் இன்று காலை 11 மணிக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதிகாலை நடைபெறும் பரணி தீப தரிசனத்துக்கு 500 கட்டணத்தில் 500 டிக்கெட்களும், மாலையில் நடைபெறும் மகா தீப தரிசனத்துக்கு 500 கட்டணத்தில் ஆயிரம் டிக்கெட்களும், 600 கட்டணத்தில் 100 டிக்கெட்களும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சிறப்பு கட்டண தரிசன டிக்கெட்கள் பெற விரும்பும் பக்தர்கள். ww.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணையதளத்தில் இன்று ஆன்லைனில் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். முன்பதிவு பெற விரும்பும் பக்தர்கள் தங்களின் ஆதார் எண், செல்போன் எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தங்களின் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், ஒரு ஆதார் எண்ணுக்கு ஒரு டிக்கெட் மட்டுமே பெற முடியும்.

Tags : Tiruvannamalai Deepathirigala ,
× RELATED திருவண்ணாமலை தீபத்திருவிழா: சிறப்பு...