தூத்துக்குடி, நவ. 20: சண்முகபுரம் தூய பேதுரு ஆலயம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலம் சண்முகபுரம் தூய பேதுரு ஆலயம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. சண்முகபுரம் தூய பேதுரு ஆலய சபையில் நடந்த இம்முகாமுக்கு சண்முகபுரம் சேகர தலைவர் செல்வின் சார்லஸ் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற சபை மக்களுக்கு சண்முகபுரம் சேகர செயலாளர்ஞானராஜ் நிலவேம்பு குடிநீர் வழங்கினார். இதில் சேகர பொருளாளர் ஜாய்சன் பொன்னுத்துரை, திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன், ஐவஹர் சுந்தர்ராஜ், மற்றும் சேகர மன்ற உறுப்பினர்கள் ராஜசிங், சோபன் பாலசிங், செல்வராஜன் சபை மக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.