தூத்துக்குடி, நவ. 20: பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டிகள், தருவை விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் பங்கேற்ற தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். 14வயதிற்குட்பட்டோர் பிரிவில் சீனிவாசன், மாரிச்செல்வி ஆகியோரும், 17வயதிற்குட்பட்டோர் பிரிவில் பவித்ராவும் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். 14வயதிற்குட்பட்டோர் பிரிவில் பாக்கியகாந்தியும், 17வயதிற்குட்பட்டோர் பிரிவில் பீர்நிலோபர் நிஷா, நாகஜோதி ஆகியோரும் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர். 14வயதிற்குட்பட்டோர் பிரிவில் அஸ்வின், அபிநயா ஆகியோரும், 17வயதிற்குட்பட்டோர் பிரிவில் பாத்திமுத்துவும் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர். தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் வென்றுள்ளதுடன் மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றுள்ள மாணவ, மாணவியர்களை பள்ளி தலைமையாசிரியை ரூபினாரொட்ரிகோ, உதவி தலைமையாசிரியர் சற்குணராஜ் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்.