சாத்தான்குளத்தில் வஉசி நினைவுதினம்

சாத்தான்குளம், நவ. 20: தேசத் தலைவர் வ.உ.சி.யின் 82வது நினைவு தினத்தையொட்டி சாத்தான்குளத்தில் வட்டார சைவ வேளாளர் சங்கம். சார்பில்  குருபூஜை நடந்தது. இதையொட்டி சாத்தான்குளம்  காசி விஸ்வநாதர்  கோயில் முன்பிருந்து மவுன ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதி வழியாக சென்று வடக்கு ரதவீதியில் உள்ள ஐயப்பன் கோயில் முன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து வ.உ.சி. படத்திற்கு நிர்வாகிள் மலர் அஞ்சலி செலுத்தினர். சங்க துணைத்தலைவர் ஜெயபிரகாஷ்நாராயணன் தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் முருகன், ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலர் ராமநாதன்  முன்னிலை வகித்தனர். சங்க அமைப்பாளர் வெங்கடாச்சலம், ஈஸ்வர்சுப்பையா, விக்ரமன்பிள்ளை  உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகநயினார், பழனி, மந்திரம், சுப்பிரமணி, இணைச்செயலாளர் சுந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சங்க பொருளாளர் அழகப்பன் நன்றி கூறினார்.

Related Stories: