×

கோவில்பட்டியில் வியாபாரி வீட்டை உடைத்து 7 பவுன் திருட்டு

கோவில்பட்டி, நவ. 20: கோவில்பட்டியில் வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 7 பவுன் நகைகளை திருடிச் சென்றனர். கோவில்பட்டி ஜோதிநகர் 4வது தெருவைச் சேர்ந்த தங்கசாமி மகன் அசோக் மாறன் (53). இவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். கோவில்பட்டி பகுதியில் உள்ள மரக்குச்சி கம்பெனியில் மொத்தவிலைக்கு தீப்பெட்டி குச்சிகளை வாங்கி பல்வேறு ஆலைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை வியாபாரத்திற்கு சென்றார். இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டைபூட்டி விட்டு கோயிலுக்கு சென்றிருந்தனர். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றதோடு ்அங்கிருந்த பீரோவையும் உடைத்து 7 பவுன் நகைகளை திருடிச் சென்றனர். தகவலறிந்து கோவில்பட்டி டிஎஸ்பி ஜெபராஜ்,  கோவில்பட்டி கிழக்கு எஸ்ஐ குருசித்திர வடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.

Tags : house break ,
× RELATED வள்ளியூர், ஏர்வாடியில் துணிகரம் பள்ளி, வீட்டை உடைத்து கொள்ளை