ஐகோர்ட் கிளை விசாரணை விழிப்புணர்வு நாடகம்

மதுரை, நவ. 20: சைல்டு லைன் அமைப்பு சார்பில் `சைல்டு லைனுக்கு தோள் கொடுப்போம்’ என்ற ஒரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரையில் கடந்த 14ம் தேதி துவங்கியது. 6ம் நாள் நிகழ்ச்சியாக குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நாடகம் நடந்தது. மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில், சைல்டுலைன் அமைப்பின் பணியாளர்களால் இந்த நாடகம் நடத்தப்பட்டது. இதனையடுத்து பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பஸ்கள், அனைத்து கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. சைல்டுலைன் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜார்ஜ், ராமச்சந்திரன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Stories: