கோஷ்டி மோதலில் 3 பேர் கைது

சோழவந்தான், நவ.20: சோழவந்தான் அருகே சித்தாலங்குடியை சேர்ந்தவர்கள் சூர்யா, ராஜேஷ் கண்ணா. இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதை தட்டிக்கேட்ட மாயக்கண்ணனை இருவரும்    தாக்கியுள்ளனர். பின்னர் இது இருதரப்பு மோதலாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டதில் ரஞ்சித், பாலு ஆகியோர் காயமடைந்தனர். இது தொடர்பாக இருதரப்பும் கொடுத்த புகாரின் பேரில் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சோழவந்தான் போலீசார் சூர்யா, ராஜேஷ்கண்ணா மற்றும் மாயக்கண்ணனை கைது செய்தனர். தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர். (இனிய வாசகர்களே... இப்பகுதிக்கு அமைப்புகள், சங்கங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிக்கான செய்திகளை,’  இன்றைய நிகழ்ச்சிகள்’ , தினகரன் நாளிதழ், 2/2, மேலூர் மெயின்ரோடு, உத்தங்குடி, மதுரை- 625 107 முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்)

Related Stories: