பண மோசடி செய்ததாக இரண்டு பேர் மீது வழக்கு

மேலூர், நவ. 20: கொட்டாம்பட்டி அருகில் உள்ள பள்ளப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் குருவார்பட்டியை சேர்ந்த மாயழகு(52) கடன் கேட்டுள்ளார். அவரின் கணக்கில் ஏற்கனவே கடன் பெறப்பட்டுள்ளதாக வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது. தான் வங்கியில் கடன் பெறவில்லை என கூறியும் வங்கி அதை ஏற்கவில்லை. இது குறித்து மாயழகு கொட்டாம்பட்டி போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.

இதைத்தொடர்ந்து மாயழகு தனக்கு தெரியாமல் ரூ.45 ஆயிரத்து 620 கடன் பெறப்பட்டுள்ளது. அதை முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ராமசாமி(60), விவசாய சங்க தலைவர் சின்னகண்ணு(35) தான் பெற்றுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலூர் குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவை தொடர்ந்து ராமசாமி மற்றும் சின்னகண்ணு மீது கொட்டாம்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Related Stories: